• Please use an working Email account to verify your memebership in the forum

En manasu

Marai mugam

Member
Messages
19
Points
13

Reputation:

நினைப்பதில்லை
என்று வருந்தாதே
என் நாழிகை நகர்ந்து
கொண்டிருப்பது
நம் அழகிய
நினைவுகளில் தானன்பே

கையளவு இதயத்தில்
கடலளவு காதலை
நிரப்பி மூழ்கடிக்கிறாய்
அன்பில் அன்பே

தொலைதூர நிலவாய்
நீ துரத்தும் மேகமாய்
உன் நினைவில் நான்

காற்றின் தீண்டலோடு
போட்டியிடும்
உன் மூச்சின் தீண்டலில்
தோற்று கொண்டிருக்கிறேன்
நான்

(சு)வாசிப்பது
நீயென்றால்
கவிதையாய்
நானிருப்பேன்

ஆழுறக்கமோ மீளாதுயிலோ
உன் கரங்களுக்குள்ளேயே
அடங்கிட வேண்டும்

தென்றலும் சுடுகிறது
உனை தீண்டாத காற்று
எனை தீண்டியதாலா

மையில்லா
உன் கிறுக்கலில்
பொய்யாய்
ஒரு கவிதையை
ரசித்தே கிறங்குது
மனமும்

அரை நொடி
வந்தாலும்
அருவியாய்
கொட்டி செல்கிறாய்
அன்பை அன்பே

விலங்காக பூட்டிக்கொள்
விலகாமல் இருப்பேன்
உன்னிதய சிறைக்குள்
காலமெல்லாம் காதலோடு

இம்சையான இன்பம்
உன் அமைதி
ஆழ் மனதுவரை
பேரிரைச்சலாய்
ஏதேதோ பேசி
கொல்கிறது

நேசமெல்லாம் வரிகளில்
நீயும் வா(நே)சிப்பாய்
என்றே

மனதை கொள்ளையடித்து
தண்டனையையும்
எனக்கே கொடுக்கிறாய்
நினைவு சிறைக்குள்
தள்ளி
 
Top