Sambaavam
Well-known member
- Messages
- 438
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
எங்கு பிறந்தாயோ
எவ்விடம் வளர்ந்தாயோ..
கருந்திமிலு பருவத்துல
கருத்தடையை செஞ்சிருப்பான்..
கட்டைவண்டி நுகத்தடில
கழுத்தத்தான் தோய்ச்சிருப்பான்..
ஆத்துமண்ணு சுமந்தாயோ
சேத்துழவு நடந்தாயோ..
கால் வயித்து செத்தைக்கு
கால்கடுக்க நீ நடந்த
கதையெல்லாம் நான் நினைச்சா
நீ இழுத்த வண்டிச் சுமை என்
நெஞ்சோடு தோத்துப்போகும்..
உன் கால்குழம்பு லாடம் சொல்லும் நீ
கடைசி வரை உழைச்ச கதை..
ஓடா தேஞ்சு நெஞ்சுக்
கூடு தெரிய உன்னப்
பாடாப்படுத்திவச்சு
காசாப் பார்த்தவங்கெ நீ
ஓஞ்சு படுக்கக்
கொஞ்ச நேரம் கொடுக்கலியே..
எவ்விடம் வளர்ந்தாயோ..
கருந்திமிலு பருவத்துல
கருத்தடையை செஞ்சிருப்பான்..
கட்டைவண்டி நுகத்தடில
கழுத்தத்தான் தோய்ச்சிருப்பான்..
ஆத்துமண்ணு சுமந்தாயோ
சேத்துழவு நடந்தாயோ..
கால் வயித்து செத்தைக்கு
கால்கடுக்க நீ நடந்த
கதையெல்லாம் நான் நினைச்சா
நீ இழுத்த வண்டிச் சுமை என்
நெஞ்சோடு தோத்துப்போகும்..
உன் கால்குழம்பு லாடம் சொல்லும் நீ
கடைசி வரை உழைச்ச கதை..
ஓடா தேஞ்சு நெஞ்சுக்
கூடு தெரிய உன்னப்
பாடாப்படுத்திவச்சு
காசாப் பார்த்தவங்கெ நீ
ஓஞ்சு படுக்கக்
கொஞ்ச நேரம் கொடுக்கலியே..