Randy
Well-known member
- Messages
- 419
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
ஏதாவது தோல்வியைச் சந்தித்தாலோ அல்லது நினைத்து நடக்காமல் போனாலோ பலர் அழுவார்கள். அது தேவையில்லை.. காரணம் அது முடிந்து போன ஒன்று.. அதை நினைத்து அழுவதால் அது வரப் போவதில்லை அல்லது மீண்டும் நடக்கப் போவதில்லை.
அடுத்து என்ன செய்ய வேண்டும்.. அதில் உங்களது சிந்தனையைத் திருப்புங்கள்.. சிந்தியுங்கள்.. அடுத்து எப்படி வெல்லலாம் என்று யோசியுங்கள்.. புத்திசாலிகள் அதைத்தான் செய்வார்கள்.
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற மனோபாவம் வேண்டும். ஒரு செயலில் நாம் தோல்வியைத் தழுவினால் அதற்காக அழுவதில் பயனில்லை. தோல்விக்கான காரணத்தைக் கண்டறிந்து அதை எப்படி சரி செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டும். தோல்வியை நினைத்து வருந்தாமல் வெற்றி அடைய என்ன வழி என்று சிந்தியுங்கள்.
எந்த ஒரு செயலிலும் தோல்வி ஏற்படுவது என்பது சகஜம் தான். ஆனால் தோல்வியே தொடர்கதையாகி விடக் கூடாது. தோல்வியை நினைத்து அழுவதால் நம்முடைய தன்னம்பிக்கை குறையும். அதனால் அழாமல் என்னால் நிச்சயம் இந்த செயலை வெற்றிகரமாக முடிப்பேன் முடித்தே தீருவேன் என்ற எண்ணத்தோடு எதிர்நீச்சல் போடுங்கள். நிச்சயம் வெற்றி உங்கள் கையில்.
முடிந்துபோனதையே எண்ணி வருந்தாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அதை நோக்கி நம்முடைய கவனம் இருக்க வேண்டு்ம். போனால் போகட்டும் போடா என்று முடிந்தவற்றைத் தூக்கிப் போடுங்கள் அடு்த்த முயற்சிக்கான விதையைப் போடுங்கள்.
வெற்றி வேண்டுமென்றால் எதிர்நீச்சல் போட்டுத்தான் ஆக வேண்டும் அதைவிடுத்து அழுவதில் எந்த பிரயோஜனமில்லை. ஒரு பந்தை நீரில் எவ்வளவு தான் மூழ்கடித்தாலும் அதற்காகக் கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் பந்து மேலே எழும்பி வரும் அது போல நாமும் தோல்வியைக் கண்டு துவளாமல் பந்தைப் போல மேலே வர வேண்டும் அது தான் நம் வாழ்க்கையை மேன்மேலும் உயர்த்தும்.
வீழ்வேன் என்று நினைத்தாயோ நான் மீண்டு வருவேன் என்று தோல்வியைக் கண்டு அஞ்சாது வெற்றிக்கான வழியைத் தேட வேண்டும். சின்ன சின்ன தோல்விகள் ஏற்பட்டால் அது நம்முடைய பிரம்மாண்ட வெற்றிக்கு வழிவகுக்கும். எப்பொழுதும் உங்கள் எண்ணம் வெற்றியை நோக்கிப் பற்றியே இருக்க வேண்டும் அதற்கான திட்டமிடலும் தொடர்முயற்சியும் அவசியம்.
தோல்வி அடைவது தவறில்லை ஆனால் தோற்றுக்கொண்டே இருப்பது தான் தவறு. தோல்வி வந்தால் அழாமல் தோல்விக்கான காரணத்தைக் கண்டறிந்து வெற்றி நோக்கி நடை போடுங்கள். மகாகவி பாரதியாரின் வாக்கிற்கேற்ப வாழ்வில் எதிர்நீச்சல் போடுங்க வெற்றி நிச்சயம். முடிஞ்சதைப் பத்தி கவலைப்பட்டு நேரத்தை வீணாக்காதீர்கள்.
Good Afternoon Friends!!
அடுத்து என்ன செய்ய வேண்டும்.. அதில் உங்களது சிந்தனையைத் திருப்புங்கள்.. சிந்தியுங்கள்.. அடுத்து எப்படி வெல்லலாம் என்று யோசியுங்கள்.. புத்திசாலிகள் அதைத்தான் செய்வார்கள்.
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற மனோபாவம் வேண்டும். ஒரு செயலில் நாம் தோல்வியைத் தழுவினால் அதற்காக அழுவதில் பயனில்லை. தோல்விக்கான காரணத்தைக் கண்டறிந்து அதை எப்படி சரி செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டும். தோல்வியை நினைத்து வருந்தாமல் வெற்றி அடைய என்ன வழி என்று சிந்தியுங்கள்.
எந்த ஒரு செயலிலும் தோல்வி ஏற்படுவது என்பது சகஜம் தான். ஆனால் தோல்வியே தொடர்கதையாகி விடக் கூடாது. தோல்வியை நினைத்து அழுவதால் நம்முடைய தன்னம்பிக்கை குறையும். அதனால் அழாமல் என்னால் நிச்சயம் இந்த செயலை வெற்றிகரமாக முடிப்பேன் முடித்தே தீருவேன் என்ற எண்ணத்தோடு எதிர்நீச்சல் போடுங்கள். நிச்சயம் வெற்றி உங்கள் கையில்.
முடிந்துபோனதையே எண்ணி வருந்தாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அதை நோக்கி நம்முடைய கவனம் இருக்க வேண்டு்ம். போனால் போகட்டும் போடா என்று முடிந்தவற்றைத் தூக்கிப் போடுங்கள் அடு்த்த முயற்சிக்கான விதையைப் போடுங்கள்.
வெற்றி வேண்டுமென்றால் எதிர்நீச்சல் போட்டுத்தான் ஆக வேண்டும் அதைவிடுத்து அழுவதில் எந்த பிரயோஜனமில்லை. ஒரு பந்தை நீரில் எவ்வளவு தான் மூழ்கடித்தாலும் அதற்காகக் கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் பந்து மேலே எழும்பி வரும் அது போல நாமும் தோல்வியைக் கண்டு துவளாமல் பந்தைப் போல மேலே வர வேண்டும் அது தான் நம் வாழ்க்கையை மேன்மேலும் உயர்த்தும்.
வீழ்வேன் என்று நினைத்தாயோ நான் மீண்டு வருவேன் என்று தோல்வியைக் கண்டு அஞ்சாது வெற்றிக்கான வழியைத் தேட வேண்டும். சின்ன சின்ன தோல்விகள் ஏற்பட்டால் அது நம்முடைய பிரம்மாண்ட வெற்றிக்கு வழிவகுக்கும். எப்பொழுதும் உங்கள் எண்ணம் வெற்றியை நோக்கிப் பற்றியே இருக்க வேண்டும் அதற்கான திட்டமிடலும் தொடர்முயற்சியும் அவசியம்.
தோல்வி அடைவது தவறில்லை ஆனால் தோற்றுக்கொண்டே இருப்பது தான் தவறு. தோல்வி வந்தால் அழாமல் தோல்விக்கான காரணத்தைக் கண்டறிந்து வெற்றி நோக்கி நடை போடுங்கள். மகாகவி பாரதியாரின் வாக்கிற்கேற்ப வாழ்வில் எதிர்நீச்சல் போடுங்க வெற்றி நிச்சயம். முடிஞ்சதைப் பத்தி கவலைப்பட்டு நேரத்தை வீணாக்காதீர்கள்.
Good Afternoon Friends!!