Silver Hawk
Active member
- Messages
- 68
- Points
- 33
Reputation:
- Thread starter
- #1
*தமிழில் எழுதும் போது*
நாம் செய்யும் தவறுகள்......
1. வாழ்த்துக்கள் என்பது தவறு.
"வாழ்த்துகள் "என்பதே சரி. " க் " வரக்கூடாது.
2. வாழ்க வளமுடன் என்பது தவறு.
" வாழ்க வளத்துடன் " என்பதே சரி.
3." நிகழும் மங்களகரமான ஆண்டு " என்று அழைப்பிதழில் அச்சிடுவது தவறு. "மங்கலமான " என்பதே சரி.
" மங்கள இசை " என்றால் ஒப்பாரி. அதாவது கடைசிப் பயணத்தின் போது இசைப்பது.
*" மங்கல இசை "* என்றால் தொடக்கம். ( துவக்கம் என்பது தவறு ).
4. நச்சுன்னு ஒரு பாட்டு, நச்சுன்னு பேசு
என்பது தவறு. *நச்சு என்றால் நஞ்சு (விஷம்)(விடம்)*.
நச்சுன்னு ஒரு பாட்டு என்றால் விஷம் போன்ற ஒரு பாட்டு என்று பொருள்.
*நறுக்கென்று* என்பதே நச்சுன்னு என்று மருவி வந்துள்ளது.
நான் நறுக்கென்று சொல்லிவிட்டேன்.
சுருக்கென்று எடுத்துக் கொள்க.
*விளக்கம்.....*
இசை நிகழ்ச்சியில் கடைசியில் பாடும் பாட்டுக்கு " மங்களம் "என்பர். கச்சேரியை முடிப்பதற்கு மங்களம் பாடு என்பர்.
ஒரு நூல் (புத்தகம்) எழுதிய ஆசிரியர் அதை எழுதி முடிக்கும்போது கடைசிப் பக்கத்தில் " சுப மங்களம் " என்று முடிப்பார். *இனிதே முடிவுற்றது* என்று பொருள்.
ஆரியர்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தை பெண்ணாகப் பிறந்து இனி குழந்தையே வேண்டாம் என்று முடிவெடுத்தால் அப் *பெண் குழந்தைக்கு "மங்களா " என்று பெயர் சூட்டுவர்.* இத்துடன் ஊற்றி மூடிவிட்டேன் என்று பொருள்.
*திருவள்ளுவர் தம் குறளில் ,*
*மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கள் பேறு* - என்று பாடியிருக்கிறார். காண்க - *மங்கலம்.* ( மங்களமில்லை )
*வாழ்க வளத்துடன் ....*
நாம் செய்யும் தவறுகள்......
1. வாழ்த்துக்கள் என்பது தவறு.
"வாழ்த்துகள் "என்பதே சரி. " க் " வரக்கூடாது.
2. வாழ்க வளமுடன் என்பது தவறு.
" வாழ்க வளத்துடன் " என்பதே சரி.
3." நிகழும் மங்களகரமான ஆண்டு " என்று அழைப்பிதழில் அச்சிடுவது தவறு. "மங்கலமான " என்பதே சரி.
" மங்கள இசை " என்றால் ஒப்பாரி. அதாவது கடைசிப் பயணத்தின் போது இசைப்பது.
*" மங்கல இசை "* என்றால் தொடக்கம். ( துவக்கம் என்பது தவறு ).
4. நச்சுன்னு ஒரு பாட்டு, நச்சுன்னு பேசு
என்பது தவறு. *நச்சு என்றால் நஞ்சு (விஷம்)(விடம்)*.
நச்சுன்னு ஒரு பாட்டு என்றால் விஷம் போன்ற ஒரு பாட்டு என்று பொருள்.
*நறுக்கென்று* என்பதே நச்சுன்னு என்று மருவி வந்துள்ளது.
நான் நறுக்கென்று சொல்லிவிட்டேன்.
சுருக்கென்று எடுத்துக் கொள்க.
*விளக்கம்.....*
இசை நிகழ்ச்சியில் கடைசியில் பாடும் பாட்டுக்கு " மங்களம் "என்பர். கச்சேரியை முடிப்பதற்கு மங்களம் பாடு என்பர்.
ஒரு நூல் (புத்தகம்) எழுதிய ஆசிரியர் அதை எழுதி முடிக்கும்போது கடைசிப் பக்கத்தில் " சுப மங்களம் " என்று முடிப்பார். *இனிதே முடிவுற்றது* என்று பொருள்.
ஆரியர்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தை பெண்ணாகப் பிறந்து இனி குழந்தையே வேண்டாம் என்று முடிவெடுத்தால் அப் *பெண் குழந்தைக்கு "மங்களா " என்று பெயர் சூட்டுவர்.* இத்துடன் ஊற்றி மூடிவிட்டேன் என்று பொருள்.
*திருவள்ளுவர் தம் குறளில் ,*
*மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கள் பேறு* - என்று பாடியிருக்கிறார். காண்க - *மங்கலம்.* ( மங்களமில்லை )
*வாழ்க வளத்துடன் ....*