Krishnaa
Member
- Messages
- 28
- Points
- 13
Reputation:
- Thread starter
- #1
காற்று வெளியிடைக் கண்ணம்மா -- நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; -- அமு
தூற்றினை யொத்த இதழ்களும் -- நில
வூறித் ததும்பும் விழிகளும் -- பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் -- இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே -- இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே -- இந்தக்
நீயென தின்னுயிர் கண்ணம்மா -- எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் -- துயர்
போயின, போயின துன்பங்கள் -- நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே -- என்றன்
வாயினி லேயமு தூறுதே -- கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே -- உயிர்த்
தீயினி லேவளர் சோதியே -- என்றன்
சிந்தனையே என்றன் சித்தமே!
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; -- அமு
தூற்றினை யொத்த இதழ்களும் -- நில
வூறித் ததும்பும் விழிகளும் -- பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் -- இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே -- இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே -- இந்தக்
நீயென தின்னுயிர் கண்ணம்மா -- எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் -- துயர்
போயின, போயின துன்பங்கள் -- நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே -- என்றன்
வாயினி லேயமு தூறுதே -- கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே -- உயிர்த்
தீயினி லேவளர் சோதியே -- என்றன்
சிந்தனையே என்றன் சித்தமே!