• Please use an working Email account to verify your memebership in the forum

கடைசி நொடி வரை போராடு..

EVILL

Elite member
Messages
1,300
Points
113

Reputation:

Thanks to the writer?

கடைசி நொடி வரை போராடு..

எவனுக்கும் அடி பணியாதே ..
யாரிடமும் தாழ்ந்து போகாதே..
அவ்வளவு சீக்கிரம் இந்த வாழ்க்கை வாழ விடாது.
சுற்றி சுற்றி சுழட்டி அடிக்கும்.
ஏமாற்றுபவர்களுக்கும்
துரோகம் செய்தவர்களுக்கே
வளைந்து கொடுக்கும்.
உன்னை மீறி இங்கு எவனுக்கும் ஒன்றும் தெரியாது.
நீ போகும் பாதை சரியில்லை என
கதறுவர்.
கத்தி கதறி ஓய்ந்து போகட்டும்.
கண்டு கொள்ளாதே..

லட்சியம் நம் கண் முன்னே தெரிந்தால் மற்றது எல்லாம்
அலட்சியமாக தெரியும்படி பார்த்துக் கொள்
முன்னேறி விடுவாய்..

கழுத்தை பிடிக்கும் நிலை வந்தாலும் தன்மானம் என்னும் கவசத்தை கைவிடாதே..
எக்காரணம் கொண்டும்
எவர் முன்னும்
எப்படியாயினும்
மண்டியிடாதே..
அதற்கு செத்து தொலையலாம்
தவறே இல்லை என நினை..

உன் வீழ்ச்சி தான் மற்றவர்களின்
சூழ்ச்சி.
புரிந்து கொள்...
அவர்களுக்கு தேவை உன் தோல்வி அல்ல
உன் தலை கவிழ்ந்த முகத்திலான கண்ணீர்..
அதை காட்டி விடாதே..
கரைந்து போவார்கள் என மனக்கணக்கு
போடாதே..
எதிர்பார்ப்பார்கள் ..
மனதுக்குள் கைகொட்டி சிரித்து
கொண்டிருப்பார்கள்..
வெற்றியை ருசிக்கும் வரை
இதையெல்லாம் பொருட்படுத்தாதே..

எந்த அதிசயமும் தானாய் எழும்பாது.
அந்த அதிசயமாய் நீயே மாறு ..
அவமானங்களை அடை காத்து
திமிராக நட..
அனைத்தும்
உன்னை நோக்கி ஓடிவரும்.
பிடித்த செயல்களை துணிந்து செய்.
பிடித்தமானவளின் மடி தேடு.
தொலை தூரம் தனியாக நடந்து செல்.
இரவின் தனிமையை ரசி.
வாழ்ந்து கொண்டிருப்பவரை
உற்று கவனி.
இவ்வுலகம் நதியை போல ஓடிக்கொண்டே
இருக்க கூடியது..
எவன் நிறுத்த சொன்னாலும் நிறுத்தாது.
உனக்கானது உன்னிடம்
வந்து அடைந்தே தீரும்.
ஓடிக்கொண்டே இரு...
 
Top