• Please use an working Email account to verify your memebership in the forum

உங்களின் உண்மையான சொத்து எது தெரியுமா?

Randy

Well-known member
Messages
419
Points
93

Reputation:

உங்களிடமிருந்து பறிக்க முடியாதது எது தெரியுமா.. உங்களின் சொத்து எது தெரியுமா.. உங்கள் புன்னகையும், தன்னம்பிக்கையும்தான்.. இதை நிறையப் பேர் உணருவதில்லை.

உண்மையில் நம்முடைய மிகப் பெரிய பலமே இந்த புன்னகையும், உற்சாகமும், தன்னம்பிக்கையும்தான்.. இவை மட்டும் நம்மை விட்டு நீங்காமல் இருந்தால் போதும் எதையும் சாதிக்கலாம்.

என்னால் முடியும் என்னால் நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று யோசிக்காமல் உங்களுக்கு எது நல்லது என்று நீங்கள் முடிவெடுங்கள். வாழ்வில் வசந்தம் வீச வேண்டுமென்றால் உற்சாகமும் மகிழ்ச்சியும் தேவை. முயன்றால் முடியாதது இவ்வுலகில் எதுவுமில்லை.

முகத்தில் தோன்றும் புன்னகை நம் மனதைரியத்தை மற்றவரிடம் வெளிச்சம் போட்டுக் காட்டும். மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் ஒரு செயலை செய்யும் போது நாம் முழுஈடுபாட்டுடன் செய்கிறோம். அதனால் எளிதில் வெற்றிக்கனியை உங்கள் வசமாக்கிக் கொள்ளலாம். சிறு புன்னகையும் உங்கள் வாழ்வை சில நேரங்களில் மகிழ்ச்சியாக மாற்றும்.

யானைக்கு பலம் தும்பிக்கையில் மனிதனுக்கு பலம் நம்பிக்கையில் என்பார்கள். நம்பிக்கை இல்லாத மனிதனால் எந்த காரியத்திலும் வெற்றி பெற முடியாது. முடியாது என்பது முட்டாளின் அகராதி. உங்கள் திறமைகளை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். முயன்றால் முடியாதது எதுவுமில்லை இந்த உலகில். வெற்றி வேண்டுமா போட்டுப் பாருங்க எதிர்நீச்சல்.

எப்பொழுதும் உற்சாகத்துடன் இருப்பவர்களால் ஒரு செயலை திறம்பட முடிக்க முடியும். வெற்றி இலக்கை விரைவில் அடைந்து விடுவர். எத்தனை முறை தோற்றாலும் தன்னம்பிக்கையோடும் முகத்தில் புன்னகையோடும் போராடும் மனிதனே இறுதியில் வெற்றி பெறுகிறான். அதனால் தோல்வியைக் கண்டு அஞ்சாமல் தன்னம்பிக்கையோடும் புன்னகையோடும் வெற்றியை நோக்கி அடி எடுத்து வையுங்கள். வெற்றி உங்கள் கையில்.
 

Attachments

  • happy7-1593001650-1600096657.jpg
    happy7-1593001650-1600096657.jpg
    21.9 KB · Views: 0

Chittukuruvi

Elite member
Messages
1,653
Points
113

Reputation:

உங்களிடமிருந்து பறிக்க முடியாதது எது தெரியுமா.. உங்களின் சொத்து எது தெரியுமா.. உங்கள் புன்னகையும், தன்னம்பிக்கையும்தான்.. இதை நிறையப் பேர் உணருவதில்லை.

உண்மையில் நம்முடைய மிகப் பெரிய பலமே இந்த புன்னகையும், உற்சாகமும், தன்னம்பிக்கையும்தான்.. இவை மட்டும் நம்மை விட்டு நீங்காமல் இருந்தால் போதும் எதையும் சாதிக்கலாம்.

என்னால் முடியும் என்னால் நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று யோசிக்காமல் உங்களுக்கு எது நல்லது என்று நீங்கள் முடிவெடுங்கள். வாழ்வில் வசந்தம் வீச வேண்டுமென்றால் உற்சாகமும் மகிழ்ச்சியும் தேவை. முயன்றால் முடியாதது இவ்வுலகில் எதுவுமில்லை.

முகத்தில் தோன்றும் புன்னகை நம் மனதைரியத்தை மற்றவரிடம் வெளிச்சம் போட்டுக் காட்டும். மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் ஒரு செயலை செய்யும் போது நாம் முழுஈடுபாட்டுடன் செய்கிறோம். அதனால் எளிதில் வெற்றிக்கனியை உங்கள் வசமாக்கிக் கொள்ளலாம். சிறு புன்னகையும் உங்கள் வாழ்வை சில நேரங்களில் மகிழ்ச்சியாக மாற்றும்.

யானைக்கு பலம் தும்பிக்கையில் மனிதனுக்கு பலம் நம்பிக்கையில் என்பார்கள். நம்பிக்கை இல்லாத மனிதனால் எந்த காரியத்திலும் வெற்றி பெற முடியாது. முடியாது என்பது முட்டாளின் அகராதி. உங்கள் திறமைகளை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். முயன்றால் முடியாதது எதுவுமில்லை இந்த உலகில். வெற்றி வேண்டுமா போட்டுப் பாருங்க எதிர்நீச்சல்.

எப்பொழுதும் உற்சாகத்துடன் இருப்பவர்களால் ஒரு செயலை திறம்பட முடிக்க முடியும். வெற்றி இலக்கை விரைவில் அடைந்து விடுவர். எத்தனை முறை தோற்றாலும் தன்னம்பிக்கையோடும் முகத்தில் புன்னகையோடும் போராடும் மனிதனே இறுதியில் வெற்றி பெறுகிறான். அதனால் தோல்வியைக் கண்டு அஞ்சாமல் தன்னம்பிக்கையோடும் புன்னகையோடும் வெற்றியை நோக்கி அடி எடுத்து வையுங்கள். வெற்றி உங்கள் கையில்.
????
 
Top