- Thread starter
- #1
டெல்லியைச் சேர்ந்த 21 வயது பெண் காவல் அதிகாரி சபியா கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இவர் உடலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக் காயங்கள் உள்ளன.
மார்புகள் அறுக்கப்பட்டிருக்கின்றன. பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டிருக்கிறது.
தான் தான் இந்த கொலையை செய்ததாக ஒருவர் சரணடைந்திருக்கிறார். அவர் தன்னை சபியா வின் கணவன் என்று கூறியுள்ளார். ஆனால் சபியா வின் பெற்றோர் இன்னும் சபியாவிற்கு திருமணமாகவில்லையென தெரிவித்துள்ளனர். சிவில் டிஃபன்ஸ் ஆஃபீசர்-ஆக சபியா வேலை பார்த்து வந்த டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் நிறைய முறைகேடுகள் நடப்பதாக அவர் தன் தந்தையிடம் சில நாட்களாகவே கூறி வந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருப்பதாகவும், கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் உயர் அதிகாரிகள் எனவும், அதனை மூடி மறைக்கவே சபியாவின் கணவன் என யாரோ ஒரு நபரை வைத்து பொய் கதை புனைவதாகவும் அவர் தந்தை கூறியுள்ளார். சபியாவிற்கும் அந்த நபருக்கும் திருமணமானதற்கு இது வரை எந்த சான்றும் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரொம்ப மன வருத்தத்தோட தான் இந்த பதிவு போடுறேன். கை நடுங்குது முடில, நேத்து தான் கொஞ்சம் விரிவா இந்த செய்தி ய பாத்தேன். நேத்துல இருந்து நெனச்சு நெனச்சு அழுதுட்ருக்கேன். ஒரு சின்ன கீறல் னாலே எனக்கு தாங்காது. 50 இடத்துக்கு மேல வெட்டுக் காயம்... அதுக்கு மேல சொல்ல முடில.
இங்கே வலுத்தவன் இளைச்சவன அடக்கி ஆள்றான். பணக்காரன், அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லாம் இல்லாதவன், தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், அன்னாடங்காய்ச்சினு இருக்றவன் இல்லாதவன அடக்கி ஆள்றான்.
ஆனால் இங்கே இருக்றவன் இல்லாதவனு எந்த பாகுபாடும் இல்லாமல் அடக்கி ஆள்ற, அடிமைப்படுத்துற ஒரே வர்க்கம் பெண் வர்க்கம் தான். உள்ளதுலயே தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட வர்க்கம் னா அது பெண் வர்க்கம் தான்.
இந்த பொண்ணுக்கு நீதி கிடைக்குமா னு தெரில. மத்தியில மாநிலத்துலனு ஆள்ற எந்த கட்சியும் இரங்கல் கூட தெரிவிக்கல. செய்தி ஊடகங்கள் ளலயும் பெரிசா காட்டல...
Last edited: