Sambaavam
Well-known member
- Messages
- 438
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
உலகின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்' நா.முத்துக்குமாரின் வரிகள்தான் இவை. ஒரு கலைஞன் மறைந்தபின், அவன் அளித்த படைப்புகள் எல்லாமே அந்த மறைவை ஒட்டிய நினைவலைகளாகவே பார்க்கப்படும். நம்மை விட்டுப்பிரிந்த நா.முத்துக்குமார் குறுகிய காலத்தில் புலிப்பாய்ச்சலாய் எண்ணற்ற படைப்புகள் அளித்தவர். வெறும் வார்த்தைத் தோரணங்களாக இல்லாமல், அர்த்தமுள்ள வரிகளாய் அவற்றை மாற்றியவர். "சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாளவில்லை... " என்பன போன்று தீவிர இலக்கியவாதிகளும் வியந்து பாராட்டும் உவமைகளை அளித்தவர். கவிஞனின் பயணம் கவிஞனின் வார்த்தைகளிலேயே... இங்கே...
Attachments
Last edited: