பூந்தென்றல்
Member
- Messages
- 27
- Points
- 13
Reputation:
- Thread starter
- #1
தூரதொலைவில் இருந்தும்
வெகுஅருகில் இருப்பதான தருணங்கள்
மறைந்து போயிருக்கின்றன.
பல்வேறு வழித்தடங்களில் நின்றிருந்தாலும்
எண்ணங்களினால் ஒன்றாய் ஒன்றிணைந்து நிற்கும்
நிலைகள் மறந்து போயிருக்கின்றன.
காலசுழற்சியினால்
வெவ்வேறு திசைகளில்
விரைந்து ஓடிக்கொண்டிருக்கும்
நாம்
பேசி, பழகி,
சிரித்து, அழுது,
சண்டையிட்டு, சமாதானமுற்று,
மனம்துவண்டு விழும்போது உற்றதோளென
தாங்கி நின்று,
இவ்வாறாக உன்னதமான பல தருணங்களை பகிர்ந்த
கனவென மாறி போன காட்சிகளை
மீண்டும் ஒருமுறையேனும்
திரும்பி பார்க்க மனம் இறைஞ்சுகிறது.
காலப்பயணம் என்பது முடிவில்லாதது தான்
அது போலவே நட்பும்…
அதனுடே
பிரிவு என்பது முற்றுப்புள்ளி இடப்பட்டதல்ல
நட்பின் மேன்மை உணர்ந்து
அருகில் சில புள்ளிகளை
முன்னின்று மீண்டும் இடுவோம்…
வெகுஅருகில் இருப்பதான தருணங்கள்
மறைந்து போயிருக்கின்றன.
பல்வேறு வழித்தடங்களில் நின்றிருந்தாலும்
எண்ணங்களினால் ஒன்றாய் ஒன்றிணைந்து நிற்கும்
நிலைகள் மறந்து போயிருக்கின்றன.
காலசுழற்சியினால்
வெவ்வேறு திசைகளில்
விரைந்து ஓடிக்கொண்டிருக்கும்
நாம்
பேசி, பழகி,
சிரித்து, அழுது,
சண்டையிட்டு, சமாதானமுற்று,
மனம்துவண்டு விழும்போது உற்றதோளென
தாங்கி நின்று,
இவ்வாறாக உன்னதமான பல தருணங்களை பகிர்ந்த
கனவென மாறி போன காட்சிகளை
மீண்டும் ஒருமுறையேனும்
திரும்பி பார்க்க மனம் இறைஞ்சுகிறது.
காலப்பயணம் என்பது முடிவில்லாதது தான்
அது போலவே நட்பும்…
அதனுடே
பிரிவு என்பது முற்றுப்புள்ளி இடப்பட்டதல்ல
நட்பின் மேன்மை உணர்ந்து
அருகில் சில புள்ளிகளை
முன்னின்று மீண்டும் இடுவோம்…