• Please use an working Email account to verify your memebership in the forum

நீர்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

இந்த உலகம் 71% நீராலும் 29% நிலத்தாலும் சூழப்பட்டது.. 71% நீரில் 97% கடல் நீர்.. மீதமுள்ள 3% மட்டுமே நன்னீர்.. அந்த 3% நீரில் 2.4% நீர் பனிக்கட்டியாக பனிப்பாறையாக உள்ளது.. மீதமுள்ள 0.6% மட்டுமே ஆறு ஏரி குளம் குட்டை நிலத்தடிநீர் என எல்லா உயிரினங்களின் பயன்பாட்டிற்கும் உள்ளது..

இந்த நீரே நீரியல் சுழற்சியில் உயிரினங்களின் பயன்பாட்டிற்கு உதவி ஆவியாகி பின்பு மேகமாக மாறி மழையாக பொழிகிறது.. அந்த மழைநீர் நதியாகவோ குளம் குட்டையாகவோ மாறி தேவைகளை தீர்கிறது.. இந்த சுழற்சி என்றும் மாறுவதில்லை.. அந்த 3% நன்னீரும் பூமியில் குறைவதில்லை..

பின்பு என்ன பிரச்சனை இங்கே?
உலக உயிரினங்களில் மனிதன் வெறும் 0.02% மட்டுமே.. மனிதனை விட அதிகமான ஆயிரகணக்கான உயிரின வகைகள் இங்கு உண்டு.. ஆனால் அவைகளால் இந்த இயற்கைக்கோ இயற்கையின் சுழற்சிக்கோ ஆபத்து இல்லை.. அதை அழிக்கும் ஒரே மிருகம் மனிதன் மட்டுமே.. இயற்கையை தேவைக்கு அதிகமாக ஆடம்பரத்திற்கு பயன்படுத்துபவனும் மனிதனே..

ஓடும் சாக்கடை மாசு அடைந்த குளம் எல்லாமே நன்னீரே இயற்கையின் கணக்கின் கீழே.. தமிழகத்தில் குளங்கள் எல்லாம் மாசு அடைந்துவிட்டது என்று இயற்கை நன்னீரை 4% மாக மாற்றாது.. அதன் சுழற்சி மாறாது.. மனிதர்கள் தான் இதை புரிந்து மாற வேண்டும்..

இந்த உலகம் மனிதனுக்கு மட்டும் அல்ல.. ???
 
Top