பூந்தென்றல்
Member
- Messages
- 27
- Points
- 13
Reputation:
- Thread starter
- #1
பசித்தழுத்திடும் தம்குழந்தைக்கு
நிலவை சுட்டி அமுதூட்ட விழைந்திடும்
கண்ணிழந்த தாய்…
கடல்கடந்த பணியிலும்
தம்பிள்ளைகளுக்கு தீராபாசத்தினை
கடத்த துடித்திடும் தந்தை…
சொல்லமுடியா காதலை
கண்வழியே தம்காதல்மனத்தினுள்
துளையிட துடித்திடும் காதலன்…
எல்லாம் மிகச்சரியாய் இருந்தும்
இவ்வனைத்திற்கும் காரணம்
அன்பு ஒன்றேயென அறியாமல் துவள்கிறோம்...
அன்புக்காக ஏங்கும் கூட்டம் ஒருபுறம்
அன்பினை பகிர்ந்திடக்கூட
நாதியற்ற கூட்டம் ஒருபுறம்
முரண்பட்ட இதயங்களை படைப்பதே
இறைவனின் வேலையாயிற்றோ?
காலம் பலகடந்தபின்
ஏங்கி கிடைக்காமல்
மனம்மரத்து நிற்பதில் பயனில்லை
அன்பு!!!
அது மழைதுளிக்கும்
மண்வாசத்திற்கும்
இடையில் இருக்கும் பந்தம் போல
உணரத்தான் முடியுமெனில்
உணருங்கள்
உணர்த்துங்கள் …
அன்புக்காய் ஏங்கும் உள்ளம் இங்கு பல உண்டு
அன்பை காட்டிடும் உள்ளமும் இங்கு பல உண்டு
பொக்கிஷங்களை நாம் தானே தேடி செல்ல வேண்டும்.
நிலவை சுட்டி அமுதூட்ட விழைந்திடும்
கண்ணிழந்த தாய்…
கடல்கடந்த பணியிலும்
தம்பிள்ளைகளுக்கு தீராபாசத்தினை
கடத்த துடித்திடும் தந்தை…
சொல்லமுடியா காதலை
கண்வழியே தம்காதல்மனத்தினுள்
துளையிட துடித்திடும் காதலன்…
எல்லாம் மிகச்சரியாய் இருந்தும்
இவ்வனைத்திற்கும் காரணம்
அன்பு ஒன்றேயென அறியாமல் துவள்கிறோம்...
அன்புக்காக ஏங்கும் கூட்டம் ஒருபுறம்
அன்பினை பகிர்ந்திடக்கூட
நாதியற்ற கூட்டம் ஒருபுறம்
முரண்பட்ட இதயங்களை படைப்பதே
இறைவனின் வேலையாயிற்றோ?
காலம் பலகடந்தபின்
ஏங்கி கிடைக்காமல்
மனம்மரத்து நிற்பதில் பயனில்லை
அன்பு!!!
அது மழைதுளிக்கும்
மண்வாசத்திற்கும்
இடையில் இருக்கும் பந்தம் போல
உணரத்தான் முடியுமெனில்
உணருங்கள்
உணர்த்துங்கள் …
அன்புக்காய் ஏங்கும் உள்ளம் இங்கு பல உண்டு
அன்பை காட்டிடும் உள்ளமும் இங்கு பல உண்டு
பொக்கிஷங்களை நாம் தானே தேடி செல்ல வேண்டும்.
Last edited: