• Please use an working Email account to verify your memebership in the forum

தமிழகத்தில் நடுநிலை

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

நடுநிலைவாதி: இஸ்லாம் சகோதரர்களை தாக்கி பேசும் மாரிதாஸை கைது செய்ய வேண்டும்..

நான்: கண்டிப்பாக சகோ.. அப்போ இந்த கருப்பர் கூட்டம் என்ன பண்ணலாம் சகோ..

நடுநிலை: அது கருத்து சுதந்திரம் சகோ..

நான்: அப்படியாண்ணே.. சரிண்ணே.. சரிண்ணே.. ??
----------------------------------------------------------
நடுநிலை: கருப்பர் கூட்டத்தின் வலையொளியை தடை செய்தது கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயல்..

நான்: சரிண்ணே.. நேத்து மாரிதாஸ் சேனல தடை பண்ணனும்னு பொங்குனீங்க..

நடுநிலை: போடா சங்கி..
----------------------------------------------------------
மதச்சார்பின்மைவாதி: கருப்பர் கூட்டம் அதில் உள்ளதை தானே சொன்னது.. அதற்காக கைதா..

நான்: சரிண்ணே.. இதே மாதிரி மத்த மதத்துல உள்ளதையும் சொல்லுவீங்களா?

ம.சா: தம்பி.. பெரும்பான்மையா இருக்கவங்க மேல தான் குறை சொல்லனும்.. சிறுபான்மை மேல சொல்ல கூடாது..

நான்: சரிண்ணே.. மதமே சார்பில்லைன்னு சொன்ன பின்னாடி பெரும்பான்மை என்ன சிறுபான்மை என்ன? அப்போ சிறுபான்மை ஆதரவாளர்னு தான சொல்லனும்னே..

ம.சா: சரி தம்பி.. நான் சிறுபான்மை ஆதரவாளர்..

நான்: சரிண்ணே.. அரபுநாடுகள்ல இந்துகள் சிறுபான்மை.. அங்க இஸ்லாம் மூட நம்பிக்கைய பத்தி சொன்ன பத்திரிக்கையாளர்கள் வருடத்துக்கு 10 பேர் கொல்லபடுறாங்களாம்.. அத பத்தி?

ம.சா: நீ ஒரு மத வெறியன்
----------------------------------------------------------
நடு.நி: தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் அதிமுகவின் கொலைவெறியை பாருங்கள்..

நான்: சரிண்ணே.. இந்த மாஞ்சோலை பத்தி சொல்லுங்க..

நடு.நி: அது அன்றைய ஆட்சியாளர்களின் தவறு..

நான்: அண்ணே.. அப்போ அன்னைக்கு திமுக ஆட்சில இல்ல.. மாஞ்சோலை படுகொலை மார்ஸ்ல நடந்துச்சு.. ரைட்டுண்ணே..
----------------------------------------------------------
நடு.நி: Obc reservation ல பாசக நம்மை வஞ்சிக்குது சகோ..

நான்: Obc இடஒதுக்கீடு 2007ல இருந்தே இல்ல சகோ.. அப்போ ஆட்சில இருந்தது காங்கிரஸும் திமுகவும் சகோ..

ந.நி: போடா சங்கி??
----------------------------------------------------------
சங்கி: அப்படி கேளுங்க சகோ.. இந்துகள்னா மட்டும் இவங்க திட்டுவானுங்க.. நாம ஒற்றுமையா இருந்து எதிர்கனும் சகோ..

நான்: ரைட்டு சகோ.. அந்த இந்துகள் அதிகமா வாழுற தமிழகத்தையே சு.சாமி பொறுக்கி, தீவிரவாதினு சொல்றானே.. அவன முதலில் எதிர்கலாமா சகோ..

சங்கி: சகோ அது வந்து....

நான்: மாஞ்சோலை படுகொலை அப்போ அதே திமுக கூட கூட்டணில இருந்த பாசகவ எதிர்கலாமா..

சங்கி: இல்ல சகோ.. அது அன்னைக்கு நிலம..

நான்: பெருவாரியான இந்துகள கொலை பண்ணுற பௌத்தர்களான சிங்களர்கள எதிர்கலாமா சகோ..

சங்கி: சகோ.. அது நட்பு நாடு... அதுனால....

நான்: Obc reservation ல மொத்த ஒதுக்கீடு 50% இருந்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லைனு கோர்ட் சொல்லியும் Obc க்கு கொஞ்சம் கூட கொடுக்காம Ewsக்கு 10% கொடுத்த பாசகவ எதிர்கலாமா சகோ...

சங்கி: போடா உபி.. கொத்தடிமை..

நான்: அடேய்.. நான் உபியா.. இல்ல சங்கியாடா.. ரெண்டு பேரும் முடிவு பண்ணி ஒன்ன சொல்லுங்கடா...
???????????

பி.கு: தமிழ்நாட்டு உபிகள் தான் வடநாட்டு ஊடகங்கள்.. வடநாட்டு சங்கிகள் தான் தமிழக ஊடகங்கள்.. இவர்கள் நடுநிலை என்பது தேர்ந்தெடுத்த எதிர்ப்பு மற்றும் தேர்ந்தெடுத்த ஆதரவு மட்டுமே
 
Last edited:
Top