• Please use an working Email account to verify your memebership in the forum

தனிமை

Messages
245
Points
63

Reputation:

வாழ்க்கையில் ஒரு நாள்
தனிமையே பல பாடங்களை
கற்றுத் தருமனால்.. நான்
என் வாழ்நாள் முழுவதையும்
தனிமையிலே வாழ
விரும்புகின்றேன்.

தனிமையில் எனக்கு
இனிமை இல்லை என்றாலும்..
அதில் துன்பங்கள் இல்லை
என்பதை உணர்த்த
மறுப்பதில்லை தனிமை..!

தனிமை மிகவும்
வித்தியாசமானது நாமே
அதை எடுத்துக் கொண்டால்
ரொம்ப இனிமையாக
இருக்கும்… தனிமையை
மற்றவர்கள் நமக்கு
கொடுத்தால் அது கசக்கும்.!

தனிமை என்பது
யாருமில்லாமல் இருப்பது
அல்ல… நம்மை சுற்றி
எல்லோரும் இருந்தாலும்
நமக்காக யாருமில்லை என்று
உணருவதே.. தனிமை.!

பல உறவுகளால் தரமுடியாத
ஆறுதலையும் நிம்மதியையும்
சில நேரம் தனிமை தந்துவிடும்.

தனிமை எனக்கு மிகவும்
பிடிக்கும் காரணம் அங்கு
என்னை காயப்படுத்த
யாரும் இல்லை.

தூக்கம் வந்தாலும் தூங்காமல்
நமக்கு பிடித்தவர்களை
தனிமையில்
நினைத்துக்கொண்டு இருப்பதும்
ஒரு தனி சுகம் தான்.

பேச யாரும் இல்லை
என்பதை விட பேசுவதைக்
கேட்க யாருமில்லை
என்பது தான்
தனிமையின் கொடூரம்.

இன்று நானும்
தனிமையில்.. நான்
காட்டிய அன்பும்
தனிமையில்.. என்
வாழ்வும் தனிமையில்..!

தனிமை என்பது நான்
தேடிக்கொண்ட சாபம்
அல்ல நான் என்
உயிருக்கும் மேலாக
நேசித்தவர்கள் எனக்கு
அளித்த பரிசு.

உரிமையோடு சிலரை
உறவென்று நினைத்தது
தவறென்று புரிந்து கொண்டேன்..
மீண்டும் தனிமையே போதும்
என்று விலகிக் கொண்டேன்.

வாழ்க்கையில் நான்
நினைப்பதெல்லாம்
கிடைக்காமல் போகும்
போதெல்லாம் எனக்கு தானாக
வந்து ஆறுதல்
சொல்கின்றது தனிமை.

ஆறுதல் இன்றி
தனிமையில் அழுது
முடித்த பின் வரும்
தன்னம்பிக்கை
மிகப் பெரியது..!

வாழ்க்கையில் தனிமையில்
இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்..
நம்முடன் இறுதி வரை
யாரும் வரப்போவதில்லை.

அருகில் இருந்தும்
போலியாக இருக்கும்
உறவுகளுடன் இருப்பதை விட..
தனிமையில் இருப்பது மேலானது.

தனிமையின் வேதனையை
உணர்வதற்கு யாருடைய
பிரிவும் அவசியமில்லை..
உணர்வுகளுக்கு மதிப்பளிக்க
தெரியாத உறவுகள் போதும்.

வலிகளையும்
வேதனைகளையும் தரும்
உறவுகளுடன்
இருப்பதை விட.. தனிமையில்
இருப்பது மன நிம்மதியை
தரும்.

போலியான உறவுகளுடன்
பொய்யான வாழ்க்கை
வாழ்வதை விட.. தனிமை
ஒன்றும் கொடூரமானது
இல்லை.

தனிமை என்பது தனியாக
இருப்பதில்லை.. அனைவரும்
இருந்தும் நமக்காக யாரும்
இல்லாது போல்
உணர்வதே தனிமை.!

எதுவும் சில காலம் தான்
இதைப் புரிந்து கொண்டால்
தனிமை இனிமையாக
இருக்கும்.

இன்பத்திலும் துன்பத்திலும்
மனம் விட்டுப் பேச
துணை இல்லாத
போதுதான் தெரியும்
தனிமையின் கொடூரம்.

தனிமை என்பது
என்னைப் பைத்தியம்
ஆக்கிக் கொண்டிருக்கின்றது..
ஆனால் நீயோ அமைதியாக
இருந்து வேடிக்கை மட்டும்
பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

தனிமை எனக்கு மிகவும்
பிடிக்கும் காரணம்..
ஏமாற்றிச் செல்லும்
உறவுகளை விட
தனிமையே நம்முடன்
பலகாலம் வாழ்கின்றது.

பல கஷ்டங்களை கண்டு
மரத்துப் போன என்
இதயத்திற்கு தனிமையே
போதுமானதாக இருக்கின்றது.

??? சத்யா7 ???
அதுக்குதான் நானும் தனிமையும் என் உலகில்!
தனி உலகில்! ??
என் தனிமையுடன் நான் வாழ மட்டும் பழகிக்கொள்ளவில்லை,
என் தனிமையை நேசிக்க கற்றுக்கொண்டேன், ?
தனிமையில் தான் நான் என்னை நேசிக்க கற்றுக்கொண்டேன்,! ?
என் இனிய தனிமையே!! ❤️?
 

Shreya

Elite member
Messages
1,585
Points
113

Reputation:

அதுக்குதான் நானும் தனிமையும் என் உலகில்!
தனி உலகில்! ??
என் தனிமையுடன் நான் வாழ மட்டும் பழகிக்கொள்ளவில்லை,
என் தனிமையை நேசிக்க கற்றுக்கொண்டேன், ?
தனிமையில் தான் நான் என்னை நேசிக்க கற்றுக்கொண்டேன்,! ?
என் இனிய தனிமையே!! ❤️?
Thambi❤❤
 

Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

எதுவும் சில காலம் தான்
இதைப் புரிந்து கொண்டால்
தனிமை இனிமையாக
இருக்கும்


இதுதான் வாழ்க்கை தரும் பாடம்
Aama rowdy ?
 

Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

தனிமை என்பது
யாருமில்லாமல் இருப்பது
அல்ல… நம்மை சுற்றி
எல்லோரும் இருந்தாலும்
நமக்காக யாருமில்லை என்று
உணருவதே.. தனிமை i felt it most of d times
True Shreya ma ??
 
Top