onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
Arunn என்பவர் குமரிகண்டம் பற்றி சொல்லியிருந்தார்..இதில் கருத்து சொல்ல வேண்டிய நிலை.. காரணம் குமரிகண்டம் பற்றி பேசியதால்..
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது பஃறுளி ஆறும் பன்மலை யடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள..
இது சிலப்பதிகாரம்.. 2000வருசத்துக்கு முன்பு எழுத்துனது.. இதோட அர்த்தம் பஃறுளி ஆறு, குமரி மலை தொடர் எல்லாமே ஆழிப்பேரலையில் அழிந்துவிட்டது என்பதே விளக்கம்.. ஆழிபேரலை என்பது நீங்கள் இன்று சொல்லும் சுனாமி. அவ்ளோ பெரிய அலை வந்து ஒரு கண்டம் மூழ்குச்சா என்று 2006 வரை நிறைய பேர் ஏளனம் செய்தனர். 2006இல் கண்ணால் கண்டனர். ஆனால் 2000 ஆண்டுக்கு முன்பே சொல்லிவிட்டானர் தமிழர். அதுவும் அதற்கும் பல நூற்றாண்டு முன்பு நடந்ததாக சொல்லியுள்ளார் இளங்கோ.
குமரிகண்டம் பற்றி சிறு விளக்கமும் இன்றும் நமக்கு உள்ள தொடர்பும்.. குமரிகண்டம் 7 பேரரசு.49 சிற்றரசு. அதன் தலைநகரம் முதலில் கபாடப்புரம். இரண்டாவது தென்மதுரை. மூன்றாவது மணலூர். முதல் சுனாமி வரும் வரை இலங்கை தமிழகம் ஒன்றாகவே இருந்தது.. நிலம் பிரியவில்லை.. இது முதல் சங்க காலம். முதல் அலையின் பின்பு எஞ்சிய மக்கள் தென்மதுரை வந்து வாழ்ந்தனர்.. இரண்டாம் அலையில் இலங்கை பிரிந்தது. எஞ்சிய மக்கள் மனலூரில் வாழ்ந்தனர்.. அங்கிருந்து கொற்கையை தலைநகரம் ஆக்கினார்கள். கொற்கையின் பின்பே வடமதுரை என்னும் இன்றைய மதுரை தலைநகரம் ஆனது. குமரிகண்ட மக்களின் புத்தாண்டு தை ஒன்று.. நம் புத்தாண்டு சித்திரை ஒன்று.. ஏன் என்றால் சூரியன் குமரிக்கண்ட கபாடபுரத்தில் தை ஒன்று வட தென் செலவுகளை முடித்து நேர்கோட்டில் வரும்.. நமக்கு சித்திரை ஒன்று அன்றே சூரியன் நேர் கோட்டில் வரும்.. குமரிக்கண்ட மக்களின் தை பொங்கல் தைபூசம் அன்று. 28நாள் திருவிழா அவர்களுக்கு. இதையும் சிலம்பு மணிமேகலை குறிப்பிட்டுள்ளது. சிலம்புவில் நாட்டியம் பற்றி நிறைய விளக்கம் வரும். நாட்டிய நன்னூலில் சொல்லியது போல் மாதவி ஆடுவதாக சொல்லுவார்.. அந்த நூல் இன்று இல்லை.. அது கடலில் மூழ்கியாதாக இறையனார் வேறு ஒரு இலக்கியத்தில் சொல்கிறார்.. மேலும் ஆயிரகணக்கான நூல் அழிந்ததாக சொல்கிறார்கள் இலக்கியத்தில்.. கீழடி, கொடுமணல், ஆதிச்சநல்லூர், அழகன்குளம், பூம்புகார் இவை எல்லாம் உடனே அந்த இடத்திற்கு சென்று யாரும் தோண்டி பார்த்து கண்டறியவில்லை.. இலக்கியத்தில் குறிப்பிட்ட இடம் உண்மையா என்று தேடிச்சென்றதன் முடிவே.. குமரிக்கண்டமும் அப்படியே.. இந்திய வரலாறு பற்றி சொல்லியவர்களில் அதிகமாக மக்கள் ஏற்றுக்கொண்ட வரலாறு அம்பேத்கர் சொல்லியது. அம்பேத்கரும் இந்திய வரலாறு தென்இந்தியாவில் இருந்தே தொடர்கிறது.. நாகர், இயக்கர் இனத்தின் தொடர்ச்சியே இந்தியம் என்கிறார். இயக்கர் இனமே அரக்கர் என திரிந்தது. இராவணனை அரக்கன் என்பது இப்படியே.. அவன் இயக்கர் இன அரசன். நாகர் இனம் வாழ்ந்த அடையாளம் தமிழகத்தில் மிகுந்து உண்டு. முரஞ்சியூர் முடிநாகனார், புறத்தினை நன்நாகனார் இப்படி பல சங்க புலவர் பெயர்களை காணலாம். நாகர் இன அரசர்களும் இயக்கர் இன அரசர்களும் இருந்ததை தமிழ் இலக்கியம் மட்டும் அல்ல.. சிங்கள வரலாறு சொல்லும் மகா வம்சம், தீப வம்சம் நூல்களும் சொல்கின்றன.
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது பஃறுளி ஆறும் பன்மலை யடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள..
இது சிலப்பதிகாரம்.. 2000வருசத்துக்கு முன்பு எழுத்துனது.. இதோட அர்த்தம் பஃறுளி ஆறு, குமரி மலை தொடர் எல்லாமே ஆழிப்பேரலையில் அழிந்துவிட்டது என்பதே விளக்கம்.. ஆழிபேரலை என்பது நீங்கள் இன்று சொல்லும் சுனாமி. அவ்ளோ பெரிய அலை வந்து ஒரு கண்டம் மூழ்குச்சா என்று 2006 வரை நிறைய பேர் ஏளனம் செய்தனர். 2006இல் கண்ணால் கண்டனர். ஆனால் 2000 ஆண்டுக்கு முன்பே சொல்லிவிட்டானர் தமிழர். அதுவும் அதற்கும் பல நூற்றாண்டு முன்பு நடந்ததாக சொல்லியுள்ளார் இளங்கோ.
குமரிகண்டம் பற்றி சிறு விளக்கமும் இன்றும் நமக்கு உள்ள தொடர்பும்.. குமரிகண்டம் 7 பேரரசு.49 சிற்றரசு. அதன் தலைநகரம் முதலில் கபாடப்புரம். இரண்டாவது தென்மதுரை. மூன்றாவது மணலூர். முதல் சுனாமி வரும் வரை இலங்கை தமிழகம் ஒன்றாகவே இருந்தது.. நிலம் பிரியவில்லை.. இது முதல் சங்க காலம். முதல் அலையின் பின்பு எஞ்சிய மக்கள் தென்மதுரை வந்து வாழ்ந்தனர்.. இரண்டாம் அலையில் இலங்கை பிரிந்தது. எஞ்சிய மக்கள் மனலூரில் வாழ்ந்தனர்.. அங்கிருந்து கொற்கையை தலைநகரம் ஆக்கினார்கள். கொற்கையின் பின்பே வடமதுரை என்னும் இன்றைய மதுரை தலைநகரம் ஆனது. குமரிகண்ட மக்களின் புத்தாண்டு தை ஒன்று.. நம் புத்தாண்டு சித்திரை ஒன்று.. ஏன் என்றால் சூரியன் குமரிக்கண்ட கபாடபுரத்தில் தை ஒன்று வட தென் செலவுகளை முடித்து நேர்கோட்டில் வரும்.. நமக்கு சித்திரை ஒன்று அன்றே சூரியன் நேர் கோட்டில் வரும்.. குமரிக்கண்ட மக்களின் தை பொங்கல் தைபூசம் அன்று. 28நாள் திருவிழா அவர்களுக்கு. இதையும் சிலம்பு மணிமேகலை குறிப்பிட்டுள்ளது. சிலம்புவில் நாட்டியம் பற்றி நிறைய விளக்கம் வரும். நாட்டிய நன்னூலில் சொல்லியது போல் மாதவி ஆடுவதாக சொல்லுவார்.. அந்த நூல் இன்று இல்லை.. அது கடலில் மூழ்கியாதாக இறையனார் வேறு ஒரு இலக்கியத்தில் சொல்கிறார்.. மேலும் ஆயிரகணக்கான நூல் அழிந்ததாக சொல்கிறார்கள் இலக்கியத்தில்.. கீழடி, கொடுமணல், ஆதிச்சநல்லூர், அழகன்குளம், பூம்புகார் இவை எல்லாம் உடனே அந்த இடத்திற்கு சென்று யாரும் தோண்டி பார்த்து கண்டறியவில்லை.. இலக்கியத்தில் குறிப்பிட்ட இடம் உண்மையா என்று தேடிச்சென்றதன் முடிவே.. குமரிக்கண்டமும் அப்படியே.. இந்திய வரலாறு பற்றி சொல்லியவர்களில் அதிகமாக மக்கள் ஏற்றுக்கொண்ட வரலாறு அம்பேத்கர் சொல்லியது. அம்பேத்கரும் இந்திய வரலாறு தென்இந்தியாவில் இருந்தே தொடர்கிறது.. நாகர், இயக்கர் இனத்தின் தொடர்ச்சியே இந்தியம் என்கிறார். இயக்கர் இனமே அரக்கர் என திரிந்தது. இராவணனை அரக்கன் என்பது இப்படியே.. அவன் இயக்கர் இன அரசன். நாகர் இனம் வாழ்ந்த அடையாளம் தமிழகத்தில் மிகுந்து உண்டு. முரஞ்சியூர் முடிநாகனார், புறத்தினை நன்நாகனார் இப்படி பல சங்க புலவர் பெயர்களை காணலாம். நாகர் இன அரசர்களும் இயக்கர் இன அரசர்களும் இருந்ததை தமிழ் இலக்கியம் மட்டும் அல்ல.. சிங்கள வரலாறு சொல்லும் மகா வம்சம், தீப வம்சம் நூல்களும் சொல்கின்றன.