Semmozhi
Well-known member
- Messages
- 330
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
#கவாத்து செய்வதன் மூலம் அதிகப்படியான மகசூல் கிடைக்கிறதாம்..!!
கவாத்து செய்வதன் முக்கியத்துவம் ! உன்
கவாத்து என்பது அதிகமாக உள்ள பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குப்படுத்தும் முறையாகும்.
இதை செய்வதன் மூலம் புதிதாக கிளைகள் மற்றும் பூ மொட்டுகளை துளிர்க்கச்செய்ய முடியும்.
இதனால் அதிக அளவில் புதிய கனிகள் மற்றும் மலர்களை தருவிக்க முடியும்.
பொதுவாக கவாத்து செய்யவில்லை என்றால் மரம், செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.
கவாத்து செய்வதன் மூலம் அதிகப்படியான மகசூலும் முழுமையாக கிடைக்கின்றன.
கவாத்து செய்யப்படும் மரங்கள் :
மாமரம், கொய்யா, மாதுளை, தேயிலை, அழகுச் செடிகள் மற்றும் பல மரங்களுக்கு பக்க கிளையைத் தோற்றுவிக்க கவாத்து செய்யப்படுகிறது.
சில மரவகைகளை நாம் முழுவதும் கவாத்து செய்யலாம். உதாரணத்திற்கு முருங்கை மரம்.
முருங்கை மரம் முழுவதும் கவாத்து செய்யப்பட்டாலும் உடனடியாக நன்றாக வளர்ந்துவிடும்.
ஆனால் சில வகை மரங்களில் நாம் குறிப்பிட்ட அளவு மட்டுமே கவாத்து செய்ய வேண்டும்
கவாத்து செய்வது எப்படி?
கவாத்து பூவெடுக்கும் தருணங்களில் பார்த்து செய்ய வேண்டும். இல்லையென்றால் மரம் பட்டு போக வாய்ப்பு உள்ளது.
செப்டம்பர் மாதத்தில் கவாத்து முக்கியம்.
முதலில் தேவை இல்லாத கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.
அதன் பிறகு தேவையான அளவு கிளைகளை விட்டுவிட்டு நன்றாக காற்றோட்ட வசதி ஏற்படுமாறு கவாத்து செய்ய வேண்டும்.
கவாத்து செய்தவுடன் வெட்டுப்பாகத்தில் குப்பைமேனிக் கலவை அல்லது பசுஞ்சாணத்தைத் தடவி வைக்க வேண்டும்.
முறையாக கவாத்து இல்லாத மரங்களில் பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும்.
மரத்தின் வயது, தாங்கும் திறன், ரகம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு கவாத்து செய்ய வேண்டும்.
எப்போது கவாத்து செய்யக்கூடாது?
மரம் அல்லது செடி நோய் தாக்குதலுக்கு உட்பட்டிருக்கும் போது செய்யக்கூடாது.
போதுமான அளவு நீர் இல்லாத சமயங்களில் செய்யக்கூடாது.
பருவ காலங்களில் பூ வைத்த பிறகு கவாத்து செய்யக்கூடாது.
பூ வைப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பு செய்யக்கூடாது. ஏனெனில் அப்படி செய்யும் போது அதிக அளவில் மீண்டும் தேவையற்ற கிளைகள் வளர்ந்துவிடும்.
கவாத்து செய்யும் போது அதிக கிளைகளை வெட்டி விடக்கூடாது.
நன்மைகள் :
கவாத்து செய்வதினால் தேவையற்ற கிளைகளை அப்புறப்படுத்தி முழு ஊட்டச்சத்துகளையும் வீணாக்காமல் பயிர்களுக்கு அளிக்கமுடிகிறது.
அதனால் செடி மற்றும் மரங்களிடையே நல்ல காற்றோட்ட வசதி ஏற்படுகிறது.
இதை செய்வதன் மூலம் மகரந்த சேர்க்கை எளிதாகவும் அதிகமாகவும் நடைபெற்று மகசூல் அதிகரிக்கப்படும்.
கவாத்து செய்யப்பட்டு நீக்கப்பட்ட கிளைகள் மற்றும் இலைகளை நாம் மக்க வைத்து இயற்கை உரமாகவும் பயன்படுத்தலாம்.
ஏனெனில் ஒரு மரம் அல்லது செடி தனக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை அதன் பாகங்களில் சேகரித்து வைத்திருக்கும்.
நாம் கவாத்து செய்யப்பட்ட கிளை மற்றும் இலைகளை அப்புறப்படுத்தினால் ஊட்டச்சத்துக்கள் வீணாகும் நிலை ஏற்படும்.
கவாத்து செய்ய தேவையான கருவி :
கவாத்து செய்வதற்கான கத்திரிக்கோல்கள் கடைகளில் கிடைக்கின்றன.
அந்தக் கத்திரியில்தான் கவாத்து செய்ய வேண்டும். அரிவாளைப் பயன்படுத்தக்கூடாது.
கவாத்து செய்வதன் முக்கியத்துவம் ! உன்
கவாத்து என்பது அதிகமாக உள்ள பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குப்படுத்தும் முறையாகும்.
இதை செய்வதன் மூலம் புதிதாக கிளைகள் மற்றும் பூ மொட்டுகளை துளிர்க்கச்செய்ய முடியும்.
இதனால் அதிக அளவில் புதிய கனிகள் மற்றும் மலர்களை தருவிக்க முடியும்.
பொதுவாக கவாத்து செய்யவில்லை என்றால் மரம், செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.
கவாத்து செய்வதன் மூலம் அதிகப்படியான மகசூலும் முழுமையாக கிடைக்கின்றன.
கவாத்து செய்யப்படும் மரங்கள் :
மாமரம், கொய்யா, மாதுளை, தேயிலை, அழகுச் செடிகள் மற்றும் பல மரங்களுக்கு பக்க கிளையைத் தோற்றுவிக்க கவாத்து செய்யப்படுகிறது.
சில மரவகைகளை நாம் முழுவதும் கவாத்து செய்யலாம். உதாரணத்திற்கு முருங்கை மரம்.
முருங்கை மரம் முழுவதும் கவாத்து செய்யப்பட்டாலும் உடனடியாக நன்றாக வளர்ந்துவிடும்.
ஆனால் சில வகை மரங்களில் நாம் குறிப்பிட்ட அளவு மட்டுமே கவாத்து செய்ய வேண்டும்
கவாத்து செய்வது எப்படி?
கவாத்து பூவெடுக்கும் தருணங்களில் பார்த்து செய்ய வேண்டும். இல்லையென்றால் மரம் பட்டு போக வாய்ப்பு உள்ளது.
செப்டம்பர் மாதத்தில் கவாத்து முக்கியம்.
முதலில் தேவை இல்லாத கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.
அதன் பிறகு தேவையான அளவு கிளைகளை விட்டுவிட்டு நன்றாக காற்றோட்ட வசதி ஏற்படுமாறு கவாத்து செய்ய வேண்டும்.
கவாத்து செய்தவுடன் வெட்டுப்பாகத்தில் குப்பைமேனிக் கலவை அல்லது பசுஞ்சாணத்தைத் தடவி வைக்க வேண்டும்.
முறையாக கவாத்து இல்லாத மரங்களில் பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும்.
மரத்தின் வயது, தாங்கும் திறன், ரகம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு கவாத்து செய்ய வேண்டும்.
எப்போது கவாத்து செய்யக்கூடாது?
மரம் அல்லது செடி நோய் தாக்குதலுக்கு உட்பட்டிருக்கும் போது செய்யக்கூடாது.
போதுமான அளவு நீர் இல்லாத சமயங்களில் செய்யக்கூடாது.
பருவ காலங்களில் பூ வைத்த பிறகு கவாத்து செய்யக்கூடாது.
பூ வைப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பு செய்யக்கூடாது. ஏனெனில் அப்படி செய்யும் போது அதிக அளவில் மீண்டும் தேவையற்ற கிளைகள் வளர்ந்துவிடும்.
கவாத்து செய்யும் போது அதிக கிளைகளை வெட்டி விடக்கூடாது.
நன்மைகள் :
கவாத்து செய்வதினால் தேவையற்ற கிளைகளை அப்புறப்படுத்தி முழு ஊட்டச்சத்துகளையும் வீணாக்காமல் பயிர்களுக்கு அளிக்கமுடிகிறது.
அதனால் செடி மற்றும் மரங்களிடையே நல்ல காற்றோட்ட வசதி ஏற்படுகிறது.
இதை செய்வதன் மூலம் மகரந்த சேர்க்கை எளிதாகவும் அதிகமாகவும் நடைபெற்று மகசூல் அதிகரிக்கப்படும்.
கவாத்து செய்யப்பட்டு நீக்கப்பட்ட கிளைகள் மற்றும் இலைகளை நாம் மக்க வைத்து இயற்கை உரமாகவும் பயன்படுத்தலாம்.
ஏனெனில் ஒரு மரம் அல்லது செடி தனக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை அதன் பாகங்களில் சேகரித்து வைத்திருக்கும்.
நாம் கவாத்து செய்யப்பட்ட கிளை மற்றும் இலைகளை அப்புறப்படுத்தினால் ஊட்டச்சத்துக்கள் வீணாகும் நிலை ஏற்படும்.
கவாத்து செய்ய தேவையான கருவி :
கவாத்து செய்வதற்கான கத்திரிக்கோல்கள் கடைகளில் கிடைக்கின்றன.
அந்தக் கத்திரியில்தான் கவாத்து செய்ய வேண்டும். அரிவாளைப் பயன்படுத்தக்கூடாது.
Last edited by a moderator: