பூந்தென்றல்
Member
- Messages
- 27
- Points
- 13
Reputation:
- Thread starter
- #1
View attachment
அம்மா...
அருந்தவம் புரிந்து
அடிமடியில் சுமந்து
அழகு மகவு ஈன்றவளே!
அள்ளி எடுத்து
அழுகை நிறுத்தி
அமுது புகட்டுபவளே!
அன்பைப் பொழிந்து
அறிவைப் பெருக்கி
அரவணைத்து மகிழ்பவளே!
அறுசுவை கூட்டி
அன்னம் சமைத்து
அளவாக ஊட்டுபவளே!
அல்லும் பகலும்
அலுவல் பலபுரிந்து
அயராது விழித்திருப்பவளே!
அருகில் அமர்த்தி
அச்சம் நீக்கி
அமைதி அருள்பவளே!
அன்றும் என்றும்
அரணாய் நின்று
அபயம் தருபவளே!
அழியா ஓவியமாய்
அன்பு நெஞ்சங்களில்
அமர்ந்து ஆழ்பவளே!
அருமை மகளாய் பிறந்து
அன்புக் கண்மணியாய் மணந்து
அன்னையென வாழ்பவளே!
அந்த ஆண்டவனின்
அவதாரமாய் வந்த உன்னையே
‘அம்மா’ என்றே அழைத்திடுவோம்!
அகம் மகிழ என்றும் போற்றிடுவோம்!
அன்னையர்தின வாழ்த்துக்கள் ❤❤❤
அம்மா...
அருந்தவம் புரிந்து
அடிமடியில் சுமந்து
அழகு மகவு ஈன்றவளே!
அள்ளி எடுத்து
அழுகை நிறுத்தி
அமுது புகட்டுபவளே!
அன்பைப் பொழிந்து
அறிவைப் பெருக்கி
அரவணைத்து மகிழ்பவளே!
அறுசுவை கூட்டி
அன்னம் சமைத்து
அளவாக ஊட்டுபவளே!
அல்லும் பகலும்
அலுவல் பலபுரிந்து
அயராது விழித்திருப்பவளே!
அருகில் அமர்த்தி
அச்சம் நீக்கி
அமைதி அருள்பவளே!
அன்றும் என்றும்
அரணாய் நின்று
அபயம் தருபவளே!
அழியா ஓவியமாய்
அன்பு நெஞ்சங்களில்
அமர்ந்து ஆழ்பவளே!
அருமை மகளாய் பிறந்து
அன்புக் கண்மணியாய் மணந்து
அன்னையென வாழ்பவளே!
அந்த ஆண்டவனின்
அவதாரமாய் வந்த உன்னையே
‘அம்மா’ என்றே அழைத்திடுவோம்!
அகம் மகிழ என்றும் போற்றிடுவோம்!
அன்னையர்தின வாழ்த்துக்கள் ❤❤❤