பூந்தென்றல்
Member
- Messages
- 27
- Points
- 13
Reputation:
- Thread starter
- #1
என்ன தான் நடக்குது நாட்டுல?....
ஒன்னும் புரியல மொத்ததுல....
புரிஞ்சிக்க முயற்சிசெஞ்சா
எப்படினுதான் தெரியல குழப்பத்துல.....
அட அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோன்ற
சிந்தனையில நாட்களும் நகருதே படிப்படியா....
ஆக எதுமே செய்யல மெச்சும்படியா.....
எல்லாமே நடக்குது குளறுபடியா.....
எப்போதான் வாழுறது மனுசன் உருப்படியா?
இலவசமாக கெடக்கிறதாலதான்
தாயின் அன்புக்கு மதிப்பில்லையோ??
அட இன்னிக்கு பாழாப்போன உசுரும்
மதிப்பில்லாம செல்லாக்காசாகலையோ??
அவசரநிலமையிலும் குடிமகன்களுக்கு ஊத்திவிட்டு
காசுப்பாக்க அலையிற இந்த அரசாங்கம்
நாளைக்கு ஒன்னுகெடக்கஒன்னு வந்தாலும்
எவனோக்கோ வந்தவிருந்தா கையகட்டியில வேடிக்க பாக்கும்.
பொருளாதாரத்த உயர்த்த வாயில வந்தபடி புளுகி
பணத்தைச் சேத்துதான் என்ன பிரயோசனமோ???.....
கொடுத்ததா கணக்குக் காட்டி தனக்கென எடுக்கலாமோ???
வந்தவரைக்கும் லாபமென நேர்மை தவறலாமோ???.
அல்பசந்தோசத்துக்காக தன்னோட
உரிமையையும் வாழ்வாதாரத்தையும் தாரைவாக்குற
இந்த மனுசாசனம் எப்போதான் திருந்துமோ???
உசுருமேல பயம் இருந்தா இலவசமா வாங்குன
அரிசிகூட வயித்துக்கா வாயிக்கானு முடிவுபண்ணமா
தெருவுலதான் நிப்பானோ???
அஞ்சறிவு படைச்ச மிருகம்கூட தனக்கு
ஆபத்துனா எதிர்த்துநின்னு போராடிடும்
பகுத்தறிவு படைச்ச மனுஷனாயிருந்து சுயகட்டுப்பாடுகூட
இல்லாம உசுர பணையவெக்க துணியிறோம்.
அட என்னவேணாலும் நடக்கட்டும் நாட்டுல
பாதுகாப்பா குடும்பத்தோட தனித்திருப்போம் வீட்டுல!!!
ஒன்னும் புரியல மொத்ததுல....
புரிஞ்சிக்க முயற்சிசெஞ்சா
எப்படினுதான் தெரியல குழப்பத்துல.....
அட அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோன்ற
சிந்தனையில நாட்களும் நகருதே படிப்படியா....
ஆக எதுமே செய்யல மெச்சும்படியா.....
எல்லாமே நடக்குது குளறுபடியா.....
எப்போதான் வாழுறது மனுசன் உருப்படியா?
இலவசமாக கெடக்கிறதாலதான்
தாயின் அன்புக்கு மதிப்பில்லையோ??
அட இன்னிக்கு பாழாப்போன உசுரும்
மதிப்பில்லாம செல்லாக்காசாகலையோ??
அவசரநிலமையிலும் குடிமகன்களுக்கு ஊத்திவிட்டு
காசுப்பாக்க அலையிற இந்த அரசாங்கம்
நாளைக்கு ஒன்னுகெடக்கஒன்னு வந்தாலும்
எவனோக்கோ வந்தவிருந்தா கையகட்டியில வேடிக்க பாக்கும்.
பொருளாதாரத்த உயர்த்த வாயில வந்தபடி புளுகி
பணத்தைச் சேத்துதான் என்ன பிரயோசனமோ???.....
கொடுத்ததா கணக்குக் காட்டி தனக்கென எடுக்கலாமோ???
வந்தவரைக்கும் லாபமென நேர்மை தவறலாமோ???.
அல்பசந்தோசத்துக்காக தன்னோட
உரிமையையும் வாழ்வாதாரத்தையும் தாரைவாக்குற
இந்த மனுசாசனம் எப்போதான் திருந்துமோ???
உசுருமேல பயம் இருந்தா இலவசமா வாங்குன
அரிசிகூட வயித்துக்கா வாயிக்கானு முடிவுபண்ணமா
தெருவுலதான் நிப்பானோ???
அஞ்சறிவு படைச்ச மிருகம்கூட தனக்கு
ஆபத்துனா எதிர்த்துநின்னு போராடிடும்
பகுத்தறிவு படைச்ச மனுஷனாயிருந்து சுயகட்டுப்பாடுகூட
இல்லாம உசுர பணையவெக்க துணியிறோம்.
அட என்னவேணாலும் நடக்கட்டும் நாட்டுல
பாதுகாப்பா குடும்பத்தோட தனித்திருப்போம் வீட்டுல!!!