RoWdy7
Elite member
- Messages
- 649
- Points
- 123
Reputation:
- Thread starter
- #1
இந்திய வரலாற்றை எழுத வேண்டிய தேவை, ஆங்கிலேயர் இந்தியாவை ஆளத்துவங்கிய, 18-ஆம் நூற்றாண்டில் தான் அறியப்பட்டது.
இந்தியாவை ஆள்வதற்கு இந்தியர்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் மற்றும் சட்டங்கள் முதலியவற்றை தெரிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் இருந்தன. அதுவே ஆங்கிலேயர்களை இதில் கவனம் செலுத்தத் தூண்டியது.[23] இதற்கு ஏதுவாக சர் வில்லியம் ஜோன்ஸ் 1784-ஆம் ஆண்டு வங்காள ஆசியக் கழகத்தை நிறுவினார்.[24] கீழை நாடுகளில் வசிக்கும் மக்கள், அவர்தம் வாழ்க்கை முறையைக் குறித்த தகவல்கள், மற்றும் ஆராய்ச்சி செய்து புரிந்துகொள்வது, ஆவணப்படுத்துவது இதன் நோக்கமாகும். சார்லஸ் வில்கின்ஸ், H.T. கோல்புரூக், H.H. வில்சன் (1786-1860) முதலியோர் பெரும் பங்காற்றினர்.
மேக்ஸ் முல்லர் உட்பட பல ஐரோப்பிய அறிஞர் பெருமக்கள் சமக்கிருதம் கற்று வேதங்களில் புலமை பெற்றனர். இந்திய நாகரிகத்தையும், பண்பாட்டையும் புரிந்துகொள்வதற்கும், இந்திய வரலாறு பின்பு சரித்திர ஆசிரியர்களால் எழுதப்படுவதற்கும் இவர்களது எழுத்து உதவியாக இருந்துவந்துள்ளது.
இதைப்போல கிருத்துவ மத குருமார்களும், தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக, இந்திய நாகரீகத்தையும், பண்பாட்டையும் நன்கு அறிந்து, கிறித்துவ மதம் இதைவிட மேம்பாடானது என்று கூறி பரப்புரையில் ஈடுபட்டனர். இவர்களின் எண்ணமும் எழுத்தும் கூட ஒருதலைப்பட்சமாக இந்திய வரலாறு எழுதப்பட்டதற்கு காரணமாக அமைந்தது என்று கருதுவோரும் உண்டு.
ஜான் ஸ்டூவர்ட் எழுதிய பிரித்தானிய இந்தியாவின் வரலாறு (History of British India) என்னும் நூல் 1817-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தியர்களின் பண்பாட்டையும், நாகரீகத்தையும் காட்டுமிராண்டித்தனமானது, காரண காரியங்களுக்கு எதிர்மறையானது என்று இந்நூல் வலியுறுத்தியது. ஆங்கில அதிகாரிகள் இந்தியா வருவதற்கு முன் பயிற்சியின் போது இந்நூலை ஒரு பாடமாகவே கற்று வந்தனர். இந்நூல் இந்தியர்கள் குறித்த ஒரு மோசமான மனப்பான்மையை அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தியது.
வி. ஏ. சிமித் என்னும் ஆங்கில அதிகாரி, இது போன்று வந்தவர்தான். இவர் ஆக்ஸ்போர்டு இந்திய வரலாறு (The Oxford history of India) என்னும் நூலை எழுதினார். ஆனால் ஸ்டூவர்ட் மில் போன்று அல்லாமல் இந்தியர்களைக் குறித்து வின்சென்ட் சிமித் அவ்வளவு மோசமான எண்ணம் கொண்டிருக்கவில்லை. இருந்தாலும் இந்தியர்கள் ஆளத்தெரியாதவர்கள் என விவரிக்கிறார். இதுபோன்று ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் ஒருதலைப்பட்சமாக இந்திய வரலாற்றை எழுதுவதற்கு இந்தியச் சரித்திர ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்திய அரசுமுறை குறித்தும் அதன் மேன்மை குறித்தும் பலவாறு விளக்கிவந்தனர்.
இவைகளின் தாக்கமாக ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் பெரும்பாலும் பேரரசர்கள், பரம்பரையாக ஆட்சி செய்வது போன்றவற்றையே எழுதிவந்தனர். அரசர் தவிர வேறு எந்தவிதமான பயனுள்ள அரசியல், சமூக அமைப்புகளைப்பற்றியும் இவர்கள் எவ்விதக் குறிப்பும் கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும் இந்திய மக்கள் சோம்பேறித்தனமான பிற்போக்கு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும் ஆழமான எண்ணங்களைத் தம் மனதில் கொண்டே வரலாறை எழுதினர்.[25] பாகுபாடற்ற அணுகுமுறையுடன் இந்திய வரலாறு இவர்களால் பார்க்கப்படவில்லை என்னும் கருத்தும் உள்ளது.
பிற்காலத்தில் இந்திய வரலாறு அதன் உண்மையான பரிமாணத்துடன் எழுதப்படவேண்டும் என பல அறிஞர்கள் விரும்பி, அவ்வாறு எழுதப்பட்டும் வந்துள்ளது.
இன்தியர்கள் ஆகிய நாம் நம் நாட்டை பற்றி அறிந்து இருத்தல் அவசியம்.. ஆனால் அதன் துவக்கம் பற்றி அறிவது மிக அவசியம்.. எனவே தான் இந்த பதிவு.. ??
இந்தியாவை ஆள்வதற்கு இந்தியர்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் மற்றும் சட்டங்கள் முதலியவற்றை தெரிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் இருந்தன. அதுவே ஆங்கிலேயர்களை இதில் கவனம் செலுத்தத் தூண்டியது.[23] இதற்கு ஏதுவாக சர் வில்லியம் ஜோன்ஸ் 1784-ஆம் ஆண்டு வங்காள ஆசியக் கழகத்தை நிறுவினார்.[24] கீழை நாடுகளில் வசிக்கும் மக்கள், அவர்தம் வாழ்க்கை முறையைக் குறித்த தகவல்கள், மற்றும் ஆராய்ச்சி செய்து புரிந்துகொள்வது, ஆவணப்படுத்துவது இதன் நோக்கமாகும். சார்லஸ் வில்கின்ஸ், H.T. கோல்புரூக், H.H. வில்சன் (1786-1860) முதலியோர் பெரும் பங்காற்றினர்.
மேக்ஸ் முல்லர் உட்பட பல ஐரோப்பிய அறிஞர் பெருமக்கள் சமக்கிருதம் கற்று வேதங்களில் புலமை பெற்றனர். இந்திய நாகரிகத்தையும், பண்பாட்டையும் புரிந்துகொள்வதற்கும், இந்திய வரலாறு பின்பு சரித்திர ஆசிரியர்களால் எழுதப்படுவதற்கும் இவர்களது எழுத்து உதவியாக இருந்துவந்துள்ளது.
இதைப்போல கிருத்துவ மத குருமார்களும், தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக, இந்திய நாகரீகத்தையும், பண்பாட்டையும் நன்கு அறிந்து, கிறித்துவ மதம் இதைவிட மேம்பாடானது என்று கூறி பரப்புரையில் ஈடுபட்டனர். இவர்களின் எண்ணமும் எழுத்தும் கூட ஒருதலைப்பட்சமாக இந்திய வரலாறு எழுதப்பட்டதற்கு காரணமாக அமைந்தது என்று கருதுவோரும் உண்டு.
ஜான் ஸ்டூவர்ட் எழுதிய பிரித்தானிய இந்தியாவின் வரலாறு (History of British India) என்னும் நூல் 1817-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தியர்களின் பண்பாட்டையும், நாகரீகத்தையும் காட்டுமிராண்டித்தனமானது, காரண காரியங்களுக்கு எதிர்மறையானது என்று இந்நூல் வலியுறுத்தியது. ஆங்கில அதிகாரிகள் இந்தியா வருவதற்கு முன் பயிற்சியின் போது இந்நூலை ஒரு பாடமாகவே கற்று வந்தனர். இந்நூல் இந்தியர்கள் குறித்த ஒரு மோசமான மனப்பான்மையை அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தியது.
வி. ஏ. சிமித் என்னும் ஆங்கில அதிகாரி, இது போன்று வந்தவர்தான். இவர் ஆக்ஸ்போர்டு இந்திய வரலாறு (The Oxford history of India) என்னும் நூலை எழுதினார். ஆனால் ஸ்டூவர்ட் மில் போன்று அல்லாமல் இந்தியர்களைக் குறித்து வின்சென்ட் சிமித் அவ்வளவு மோசமான எண்ணம் கொண்டிருக்கவில்லை. இருந்தாலும் இந்தியர்கள் ஆளத்தெரியாதவர்கள் என விவரிக்கிறார். இதுபோன்று ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் ஒருதலைப்பட்சமாக இந்திய வரலாற்றை எழுதுவதற்கு இந்தியச் சரித்திர ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்திய அரசுமுறை குறித்தும் அதன் மேன்மை குறித்தும் பலவாறு விளக்கிவந்தனர்.
இவைகளின் தாக்கமாக ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் பெரும்பாலும் பேரரசர்கள், பரம்பரையாக ஆட்சி செய்வது போன்றவற்றையே எழுதிவந்தனர். அரசர் தவிர வேறு எந்தவிதமான பயனுள்ள அரசியல், சமூக அமைப்புகளைப்பற்றியும் இவர்கள் எவ்விதக் குறிப்பும் கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும் இந்திய மக்கள் சோம்பேறித்தனமான பிற்போக்கு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும் ஆழமான எண்ணங்களைத் தம் மனதில் கொண்டே வரலாறை எழுதினர்.[25] பாகுபாடற்ற அணுகுமுறையுடன் இந்திய வரலாறு இவர்களால் பார்க்கப்படவில்லை என்னும் கருத்தும் உள்ளது.
பிற்காலத்தில் இந்திய வரலாறு அதன் உண்மையான பரிமாணத்துடன் எழுதப்படவேண்டும் என பல அறிஞர்கள் விரும்பி, அவ்வாறு எழுதப்பட்டும் வந்துள்ளது.
இன்தியர்கள் ஆகிய நாம் நம் நாட்டை பற்றி அறிந்து இருத்தல் அவசியம்.. ஆனால் அதன் துவக்கம் பற்றி அறிவது மிக அவசியம்.. எனவே தான் இந்த பதிவு.. ??